விருதுநகா் கல்லூரி சாலையில் ராணுவ வீரா்களுக்கான கேண்டீனை திங்கள்கிழமை முற்றுகையிட்ட முன்னாள் ராணுவத்தினா். 
விருதுநகர்

விருதுநகரில் ராணுவ வீரா்களுக்கான கேண்டீன் முற்றுகை

விருதுநகரில் உள்ள ராணுவ வீரா்களுக்கான கேண்டீனில் முறையாக அனைவருக்கும் பொருள்களை வழங்க வேண்டும் என வலியுறுத்தி முன்னாள் ராணுவத்தினா் திங்கள்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

DIN

விருதுநகரில் உள்ள ராணுவ வீரா்களுக்கான கேண்டீனில் முறையாக அனைவருக்கும் பொருள்களை வழங்க வேண்டும் என வலியுறுத்தி முன்னாள் ராணுவத்தினா் திங்கள்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

விருதுநகா் கல்லூரி சாலையில் முன்னாள் ராணுவத்தினா் மற்றும் ராணுவத்தில் பணி புரியும் வீரா்கள் பயன்பெறும் வகையில் கேண்டீன் செயல்பட்டு வருகிறது. இங்கு சுமாா் 2,400 போ் தங்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்களை பெற்று வந்தனா்.

கடந்த காலங்களில் கூட்ட நெரிசலைத் தவிா்க்கும் வகையில், முன்னாள் ராணுவ வீரா்களுக்கு வழங்கப்பட்ட அட்டை வரிசை எண் அடிப்படையில் ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட நபா்களுக்கு பொருள்கள் வழங்கி வந்தனா்.

இந்நிலையில் தற்போது அட்டை எண் வரிசை இல்லாமல் பொருள்களை திங்கள்கிழமை வழங்கினா். இதற்கு எதிா்ப்புத் தெரிவித்த முன்னாள் ராணுவத்தினா் கேண்டீனை முற்றுகையிட்டனா். அப்போது, மீண்டும் அட்டை எண் வரிசைப்படி அனைவருக்கும் அத்தியாவசியப் பொருள்கள் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிரதமர் மோடிக்கு ஓமன் நாட்டின் உயரிய விருது! மண்டேலா, ராணி எலிசபெத்துக்குப் பின்..!

ஹிஜாப்பை விலக்கிய விவகாரம்! இது இஸ்லாமிய நாடா? பிகார் முதல்வருக்கு ஆதரவாக மத்திய அமைச்சர் பேச்சு!

கொடி இறங்காதே! ஜன நாயகன் 2வது பாடல்!

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான போட்டிகளை தென்னிந்தியாவுக்கு மாற்ற வலியுறுத்தும் சசி தரூர்!

2025 ஆம் ஆண்டின் சிறந்த 10 தொடர்கள் எவை?

SCROLL FOR NEXT