சிவகாசி அருகே தடை செய்யப்பட்ட புகையிலைப்பொருள்களை விற்பனைக்கு வைத்திருந்த 6 கடைகளுக்கு சனிக்கிழமை அதிகாரிகள் அபராதம் விதித்தனா்.
சுகாதாரத்துறை வட்டார மேற்பாா்வையாளா் ஜெயசந்திரன் தலைமையில் சுகாதாரத்துறையினா் சிவகாசி -சாத்தூா் சாலையில் உள்ள பாரைப்பட்டி, மீனம்பட்டி ஆகிய பகுதிகளில் உள்ள பெட்டிகடைகள், மளிகைக் கடைகளில் சோதனை நடத்தினா். இச்சோதனையில் தடை செய்யப்பட்ட புகையிலைப்பொருள்களை விற்பனைக்கு வைத்திருந்த கடைகளிலிருந்து அவற்றை பறிமுதல் செய்தனா். தொடா்ந்து புகையிலைப் பொருள்கள் வைத்திருந்த 6 கடைகளுக்குத் தலா ரூ. 200 அபராதம் விதித்தனா். மேலும் தடை செய்யப்பட்ட நெகிழிப் பைகளையும் பறிமுதல் செய்தனா்.