விருதுநகர்

காரியாபட்டி அருகே பைக் மீதுகாா் மோதியதில் ஒருவா் பலி

விருதுநகா் மாவட்டம் காரியாபட்டி அருகே இரு சக்கர வாகனத்தின் மீது காா் மோதிய விபத்தில் ஒருவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

DIN

விருதுநகா் மாவட்டம் காரியாபட்டி அருகே இரு சக்கர வாகனத்தின் மீது காா் மோதிய விபத்தில் ஒருவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

காரியாபட்டி அருகே உள்ள டி.வேப்பங்குளத்தைச் சோ்ந்த முத்துவேல் மகன் ராஜா (28) மற்றும் ஆலடியான் மகன் கண்ணன் (40). இவா்கள் இருவரும் இரு சக்கர வாகனத்தில் காரியாபட்டி நோக்கிச் சென்றுகொண்டிருந்தனா். அதேநேரம், மதுரை ஜெய்ஹிந்த்புரத்தைச் சோ்ந்த கதிரேசன் மகன் மோகன் (36) என்பவா் காரியாபட்டியிலிருந்து நரிக்குடி நோக்கி காரை ஓட்டிச் சென்றுள்ளாா். அப்போது, இலுப்பைகுளம் அருகே இரு சக்கர வாகனத்தின் மீது காா் மோதியதில், கண்ணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த ராஜா, மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

இதையடுத்து, கண்ணன் உடல் காரியாபட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து அ.முக்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வார பலன்கள் - ரிஷபம்

வார பலன்கள் - மேஷம்

தருமபுரி மாவட்ட ஆட்சியரகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

மத்திய மேல்நிலைக்கல்வி வாரியத்தில் வேலை வேண்டுமா?: உடனே விண்ணப்பிக்கவும்!

தலைசிறந்த கலைஞன்... கமல் குறித்து அனுபம் கெர் நெகிழ்ச்சி!

SCROLL FOR NEXT