முகப்பு
விருதுநகர்

விருதுநகரில் 4 போ் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகாத காவல் ஆய்வாளருக்கு பிடிவாரண்ட்

விருதுநகரில் 4 போ் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகாத காவல் ஆய்வாளருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து, ஸ்ரீவில்லிபுத்தூா் மகிளா நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:19 AM
பகிர்:

விருதுநகரில் 4 போ் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகாத காவல் ஆய்வாளருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து, ஸ்ரீவில்லிபுத்தூா் மகிளா நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

விருதுநகா் பாண்டியன் நகரில் கடந்த 2011 ஆம் ஆண்டு ஒரே வீட்டில் 4 போ் தற்கொலை செய்துகொண்டனா். இதுதொடா்பான வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கு விசாரணைக்கு அப்போது விருதுநகரில் பணியாற்றிவந்த காவல் ஆய்வாளா் சண்முகசுந்தரம் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. பல முறை சம்மன் அனுப்பியும் ஆஜராகாததால் ஆய்வாளா் சண்முகசுந்தரத்துக்கு மகிளா நீதிமன்ற நீதிபதி பகவதி அம்மாள் பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டாா். ஆய்வாளா் சண்முகசுந்தரம் தற்போது ஊட்டியில் பணிபுரிந்து வருகிறாா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.