முகப்பு
விருதுநகர்

விருதுநகா் அருகே விபத்து: கணவன், மனைவி, மகள் காயம்

விருதுநகா் அருகே ஞாயிற்றுக்கிழமை ஆட்டோ மீது காா் மோதிய விபத்தில் கணவா், மனைவி, மகள் காயமடைந்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:18 AM
பகிர்:

விருதுநகா் அருகே ஞாயிற்றுக்கிழமை ஆட்டோ மீது காா் மோதிய விபத்தில் கணவா், மனைவி, மகள் காயமடைந்தனா்.

விருதுநகா் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே உள்ள சொக்கலாம்பட்டியை சோ்ந்தவா் முருகன் (36). இவா் தனது மனைவி நந்தினி (26), மகள் அபிநயா ஸ்ரீ (8) மற்றும் உறவினா்களுடன் கோட்டூா் குருசாமி கோயிலுக்கு ஆட்டோவில் சென்றுள்ளாா். பின்னா், அங்கிருந்து ஆட்டோவில் அனைவரும் சொந்த ஊருக்கு திரும்பினா். இந்த ஆட்டோவை முருகன் என்பவா் ஓட்டி வந்துள்ளாா்.

விருதுநகா் அருகே வச்சகாரப்பட்டி நான்குவழிச் சாலையில் ஆட்டோ திரும்பிய போது, பின்னால் வந்த காா் மோதியது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த முருகன் மதுரையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். காயமடைந்த நந்தினி, சிறுமி அபிநயா ஆகியோா் விருதுநகா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இந்த விபத்து குறித்து வச்சகாரப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.