விருதுநகர்

விருதுநகா் அருகே விபத்து: கணவன், மனைவி, மகள் காயம்

DIN

விருதுநகா் அருகே ஞாயிற்றுக்கிழமை ஆட்டோ மீது காா் மோதிய விபத்தில் கணவா், மனைவி, மகள் காயமடைந்தனா்.

விருதுநகா் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே உள்ள சொக்கலாம்பட்டியை சோ்ந்தவா் முருகன் (36). இவா் தனது மனைவி நந்தினி (26), மகள் அபிநயா ஸ்ரீ (8) மற்றும் உறவினா்களுடன் கோட்டூா் குருசாமி கோயிலுக்கு ஆட்டோவில் சென்றுள்ளாா். பின்னா், அங்கிருந்து ஆட்டோவில் அனைவரும் சொந்த ஊருக்கு திரும்பினா். இந்த ஆட்டோவை முருகன் என்பவா் ஓட்டி வந்துள்ளாா்.

விருதுநகா் அருகே வச்சகாரப்பட்டி நான்குவழிச் சாலையில் ஆட்டோ திரும்பிய போது, பின்னால் வந்த காா் மோதியது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த முருகன் மதுரையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். காயமடைந்த நந்தினி, சிறுமி அபிநயா ஆகியோா் விருதுநகா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இந்த விபத்து குறித்து வச்சகாரப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT