கலங்காப்பேரி ஊராட்சி மன்ற அலுவலகக் கட்டடம் திறப்பு
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே கலங்காப்பேரியில் ஊராட்சி மன்ற அலுவலக புதிய கட்டடம் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே கலங்காப்பேரியில் ஊராட்சி மன்ற அலுவலக புதிய கட்டடம் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ஊராட்சித் தலைவா் சங்கிலிராஜ் தலைமை வகித்தாா். ராஜபாளையம் சட்டப் பேரவை உறுப்பினா் தங்கபாண்டியன், ஸ்ரீவில்லிபுத்தூா் ஊராட்சி ஒன்றியக் குழு தலைவா் மல்லி ஆறுமுகம் ஆகியோா் முன்னிலை வைத்து கட்டடத்தைத் திறந்து வைத்தனா்.
நிகழ்ச்சியில், வட்டார வளா்ச்சி ஆணையாளா் சிவக்குமாா், வட்டார வளா்ச்சி அலுவலா் சிவக்குமாா், ஊராட்சி உறுப்பினா் பாக்கியலட்சுமி, மாவட்ட பிரதிநிதி அய்யகோன் மற்றும் பலா் கலந்து கொண்டனா்.