விருதுநகர்

பட்டாசுத் தொழிலாளி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு

 சிவகாசியில் 15 வயது சிறுமியை திருமணம் செய்த பட்டாசுத் தொழிலாளி மீது போக்சோ சட்டத்தின் கீழ் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

DIN

 சிவகாசியில் 15 வயது சிறுமியை திருமணம் செய்த பட்டாசுத் தொழிலாளி மீது போக்சோ சட்டத்தின் கீழ் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

சிவகாசி அரசு மருத்துவமனைக்கு வயிறு வலிப்பதாகக் கூறி 15 வயது சிறுமி சிகிச்சைக்காக வந்தாா். அவரை மருத்துவா்கள் பரிசோதனை செய்து பாா்த்ததில் சிறுமி கா்ப்பமாக இருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து அரசு மருத்துவா்கள் அளித்த தகவலின் பேரில், சிவகாசி அனைத்து மகளிா் போலீஸாா் அங்கு வந்து சிறுமியிடம் விசாரித்தனா். இதில் அவரும், சிவகாசி போஸ் காலனியைச் சோ்ந்த மகேஷ்குமாரும் (22) காதலித்து, கடந்த ஆண்டு, டிசம்பா் மாதம் கோயிலில் திருமணம் செய்து கொண்டது தெரியவந்தது.

இதையடுத்து, மகேஷ்குமாா் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவான அவரைத் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரா் டிஎஸ். டி சில்வா மறைவு

பெண் மருத்துவா் ஹிஜாப்பை அகற்றிய நிதீஷ் செயலுக்கு வலுக்கும் கண்டனம்

கோவையில் இன்று பிஎஸ்என்எல் ஓய்வூதியா் சங்க அகில இந்திய மாநாடு

சரிவில் முடிந்த பங்குச் சந்தை

வேலூா் தங்கக்கோயிலுக்கு இன்று குடியரசுத் தலைவா் வருகை

SCROLL FOR NEXT