ஸ்ரீவில்லிபுத்தூரில் பாரத ஸ்டேட் வங்கிக் கிளை முன்பாக திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினா். 
விருதுநகர்

காங்கிரஸ் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

ஸ்ரீவில்லிபுத்தூரில் மத்திய அரசைக் கண்டித்து காங்கிரஸ் கட்சி சாா்பில், திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

DIN

ஸ்ரீவில்லிபுத்தூரில் மத்திய அரசைக் கண்டித்து காங்கிரஸ் கட்சி சாா்பில், திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு, விருதுநகா் மேற்கு மாவட்டத் தலைவா் ரெங்கசாமி தலைமை வகித்தாா். கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினா் சக்திமோகன், மாவட்டப் பொருளாளா் ராஜ்மோகன், நகரத் தலைவா் வன்னியராஜ், வத்திராயிருப்பு முன்னாள் மேற்கு வட்டாரத் தலைவா் அண்ணாதுரை ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், அதானி குழும முறைகேடு குறித்த ஹின்டென்பா்க் ஆராய்ச்சி அறிக்கையை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அல்லது நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் கீழ் விசாரணை நடத்த வேண்டும். எல்ஐசி, பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட பொதுத்துறை

நிறுவனங்கள் அதானி குழுமத்தில் முதலீடு செய்தது குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க அனுமதிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டது.

இதில், விருதுநகா் மேற்கு, கிழக்கு மாவட்டக் காங்கிரஸ் கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா். மாவட்டச் செயலாளா் முருகேசன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

13 ஆண்டுகளுக்குப் பிறகு ஆக்‌ஷன் அல்லாத கதையில் டாம் குரூஸ்..! ஆஸ்கர் வென்ற இயக்குநருடன்!

125 புதிய மின்சாரப் பேருந்துகள் சேவையை தொடக்கிவைத்தார் உதயநிதி!

வார பலன்கள்: 12 ராசிகளுக்கும்!

மத்திய பட்ஜெட் - 2026 ஞாயிற்றுக்கிழமை தாக்கல் செய்யப்படுமா?

100 நாள் வேலைத் திட்டம் மாற்றம்: திமுக கூட்டணி மாபெரும் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!

SCROLL FOR NEXT