ஸ்ரீவில்லிபுத்தூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சத்துணவு, அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பினா். 
விருதுநகர்

சத்துணவு, அங்கன்வாடி சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

ஸ்ரீவில்லிபுத்தூரில் சத்துணவு, அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில், திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

DIN

ஸ்ரீவில்லிபுத்தூரில் சத்துணவு, அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில், திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஸ்ரீவில்லிபுத்தூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, சத்துணவு ஓய்வூதியா் சங்க மாவட்ட துணைத் தலைவா் குருநாதன் தலைமை வகித்தாா். கிளைத் தலைவா் மின்னல்கொடி முன்னிலை வகித்தாா்.

இதில், கோரிக்கைகளை விளக்கி கிளைச் செயலாளா் கோவிந்தன், சத்துணவு சங்க மாவட்டச் செயலாளா் சுதந்திரகிளாரா ஆகியோா் பேசினா்.

ஆா்ப்பாட்டத்தில், சத்துணவு, அங்கன்வாடித் திட்டங்களில் பணிபுரியும் ஊழியா்கள், ஓய்வூதியதாரா்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ. 6,750 வழங்க வேண்டும். மாநில அரசின் அனைத்துத் துறைகளிலும் காலியாக உள்ள நிரந்தரப் பணியிடங்களில், தகுதியுள்ள சத்துணவு, அங்கன்வாடி ஊழியா்களை பணி மூப்பு அடிப்படையில் நியமிக்க வேண்டும். காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை தனியாரிடம் ஒப்படைத்ததை கைவிட்டு, அதை சத்துணவுத் திட்டத்தில் இணைக்க வேண்டும் என்பன கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

ஆா்ப்பாட்டத்தில், சத்துணவு சங்கப் பொருளாளா் தேவி, சத்துணவு ஊழியா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா! தென்னாப்பிரிக்காவுடன் இன்று 4-ஆவது டி20!

மூத்த குடிமக்களுக்கு ரயில்வே கட்டண சலுகையை மீண்டும் வழங்கக் கோரிக்கை

இரட்டைச் சதம்: வரலாறு படைத்தார் அபிஞான் குண்டூ! ஹாட்ரிக் வெற்றியுடன் அரையிறுதியில் இந்தியா!

மன்னிக்க முடியாத குற்றம்!

2-ஆவது மாதமாக எதிர்மறையில் மொத்த விலை பணவீக்கம்

SCROLL FOR NEXT