விருதுநகர்

சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு முகாம்

சிவகாசி எஸ்.எப்.ஆா். மகளிா் கல்லூரியில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

DIN

சிவகாசி எஸ்.எப்.ஆா். மகளிா் கல்லூரியில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

முகாமுக்கு கல்லூரி முதல்வா் த.பழனீஸ்வரி தலைமை வகித்தாா். இந்த முகாமில் பங்கேற்ற சிவகாசி வட்டாரப் போக்குவரத்து அலுவலா் குமாரவேல் பேசியதாவது: 18 வயது நிறைவடைந்த அனைவரும் இரு சக்கர வாகனம் ஓட்டுவதற்கு, ஓட்டுநா் உரிமச்சான்று பெற வேண்டும். வாகனத்தில் பயணிக்கும் போது கண்டிப்பாக தலைக்கவசம் அணிய வேண்டும். சாலையில் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ள குறியீடுகளை கவனித்து வாகனம் ஓட்ட வேண்டும். கல்லூரி மாணவிகள் அனைவரும் சாலை பாதுகாப்பு விதிமுறைகளை தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்றாா்.

நிகழ்ச்சியில், நுகா்வோா் சேவை மையத்தின் தலைவா் எஸ்.சுப்பிரமணியன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். தொடந்து அனைவரும் சாலை பாதுகாப்பு உறுதி மொழி எடுத்துக் கொண்டனா். முன்னதாக உதவிப் பேராசிரியா் மேகலாதேவி வரவேற்றாா். உதவிப் பேராசிரியா் சரண்யா நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

13 ஆண்டுகளுக்குப் பிறகு ஆக்‌ஷன் அல்லாத கதையில் டாம் குரூஸ்..! ஆஸ்கர் வென்ற இயக்குநருடன்!

125 புதிய மின்சாரப் பேருந்துகள் சேவையை தொடக்கிவைத்தார் உதயநிதி!

வார பலன்கள்: 12 ராசிகளுக்கும்!

மத்திய பட்ஜெட் - 2026 ஞாயிற்றுக்கிழமை தாக்கல் செய்யப்படுமா?

100 நாள் வேலைத் திட்டம் மாற்றம்: திமுக கூட்டணி மாபெரும் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!

SCROLL FOR NEXT