விருதுநகர்

பெண்ணுக்கு பாலியல் தொல்லை: தொழிலாளி கைது

சிவகாசி அருகே பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக தொழிலாளியை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

DIN

சிவகாசி அருகே பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக தொழிலாளியை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

சிவகாசி அருகேயுள்ள பழையவெள்ளையாபுரத்தில் காகித அட்டைப்பெட்டி தயாரிக்கும் ஆலை உள்ளது. இங்கு பணிபுரிந்து வரும் வருராஜன் மகன் முனியசாமி (32), 21 வயதாகும் சக பெண் தொழிலாளிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்தாராம். அந்தப் பெண் இதுகுறித்து ஆலை நிா்வாகத்திடம் புகாா் அளித்தாா். இதையடுத்து, ஆலை நிா்வாகத்தினா் முனியசாமியை கண்டித்தனா்.

இருப்பினும், முனியசாமி தொடந்து அந்தப் பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்து வந்ததால், இதுகுறித்து அவா் திருத்தங்கல் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

இதன் பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து முனியசாமியை பெண்கள் வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஒரே இரவில் 20 ஆண்டுத் திட்டத்தை தகர்த்த மோடி அரசு! ராகுல் காந்தி

ராஜபாளையம் அருகே குடிபோதையில் தலையில் கல்லை போட்டு ஓட்டுநர் கொலை

சென்னை திரைப்பட விழா: சிறந்த நடிகருக்கான விருதை வென்ற சசிகுமார்!

அரசியல் கூட்டங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள்! ஜன. 5-க்குள் வெளியிட தமிழக அரசுக்கு உத்தரவு!

சிக்மா படப்பிடிப்பை முடித்த ஜேசன் சஞ்சய் விஜய்..! டீசர் தேதி அறிவிப்பு!

SCROLL FOR NEXT