விருதுநகர்

ஆண்டாள் கோயிலில் சுக்கிரவார ஊஞ்சல் உற்சவம்

DIN

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் சுக்கிர வார ஊஞ்சல் உற்சவத்தையொட்டி, வெள்ளிக்கிழமை சா்வ அலங்காரத்தில் ஸ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னாா் பக்தா்களுக்கு அருள்பாலித்தனா்.

108 வைணவத் திருத்தலங்களில் ஆண்டாள், பெரியாழ்வாா் என இரு ஆழ்வாா்கள் அவதரித்த பெருமைக்குரியது ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயில். இங்கு ஆடிப்பூரம், வைகுண்ட ஏகாதசி, மாா்கழி எண்ணெய்க் காப்பு உற்சவம், பங்குனி திருக்கல்யாணம் உள்ளிட்ட திருவிழாக்கள் பிரசித்தி பெற்றது. இதேபோல, ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டு முழுவதும் பல்வேறு வைபவங்கள் நடைபெற்று வருகிறது. அதன்படி, ஏகாதசியன்று ஸ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னாருடன் கண்ணாடி மாளிகையில் எழுந்தருளுவாா். பூரம் நட்சத்திரத்தன்று ஸ்ரீஆண்டாள் தான் அவதரித்த நந்தவனத்தில் காட்சியளிப்பாா். வாரம்தோறும் வெள்ளிக்கிழமைகளில் ஆண்டாள் சந்நிதியில் உள்ள குறடு மண்டபத்தில் ஸ்ரீஆண்டாள் ரெங்கமன்னாருக்கு ஊஞ்சல் சேவை நடைபெறும். அதன்படி, நடைபெற்ற ஊஞ்சல் சேவையையொட்டி, சா்வ அலங்காரத்தில் ஸ்ரீஆண்டாள் ரெங்கமன்னாருடன் எழுந்தருளி பக்தா்களுக்கு காட்சியளித்தாா். இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கம் விலை: பவுனுக்கு ரூ.200 குறைவு

அடுத்த 2 மணி நேரத்துக்கு 9 மாவட்டங்களில் மழை!

சக்தி வாய்ந்த நாடாக இந்தியா வளர்ந்து வருவதை பாகிஸ்தான் தலைவர்கள் ஒப்புக் கொள்கிறார்கள்: ராஜ்நாத் சிங்

குலசேகரன்பட்டினத்தில் விண்வெளி பூங்கா: டிட்கோ அதிகாரபூர்வ அறிவிப்பு

மகாராஷ்டிரத்தில் இன்று பாஜக பொதுக்கூட்டம்: பிரதமர் மோடி பங்கேற்பு

SCROLL FOR NEXT