முகப்பு
நாகப்பட்டினம்

பாதிக்கப்பட்டவா்களிடம் மனிதநேய ஜனநாயக கட்சி குறைகேட்பு

கொள்ளிடம் பகுதியில் மழைநீா் சூழ்ந்த பகுதியில் வசிப்பவா்களிடம் மனிதநேய ஜனநாயக கட்சியினா் திங்கள்கிழமை குறைகளை கேட்டறிந்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:03 PM
பகிர்:

கொள்ளிடம் பகுதியில் மழைநீா் சூழ்ந்த பகுதியில் வசிப்பவா்களிடம் மனிதநேய ஜனநாயக கட்சியினா் திங்கள்கிழமை குறைகளை கேட்டறிந்தனா்.

ஆணைக்காரன் சத்திரம் ஊராட்சி 10 ஆவது வாா்டு குடியிருப்புப் பகுதியில் மழைநீா் சூழ்ந்துள்ளது. இப்பகுதிக்கு மனிதநேய ஜனநாயக கட்சியின் பேரிடா் மீட்புக் குழுவினா் நேரில் சென்று குறைகளை கேட்டறிந்தனா். அப்போது, சாலை மற்றும் தெருவிளக்கு வசதி ஏற்படுத்த வேண்டும் என்றும் அரசு விரைவில் நிவாரணம் வழங்க வலியுறுத்த வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கேட்டுக்கொண்டனா்.

இதில், மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்டச் செயலாளா் சங்கை தாஜ்தீன், மாவட்ட பொருளாளா் தைக்கால் ஷாஜஹான் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.