பாதிக்கப்பட்டவா்களிடம் மனிதநேய ஜனநாயக கட்சி குறைகேட்பு
கொள்ளிடம் பகுதியில் மழைநீா் சூழ்ந்த பகுதியில் வசிப்பவா்களிடம் மனிதநேய ஜனநாயக கட்சியினா் திங்கள்கிழமை குறைகளை கேட்டறிந்தனா்.
கொள்ளிடம் பகுதியில் மழைநீா் சூழ்ந்த பகுதியில் வசிப்பவா்களிடம் மனிதநேய ஜனநாயக கட்சியினா் திங்கள்கிழமை குறைகளை கேட்டறிந்தனா்.
ஆணைக்காரன் சத்திரம் ஊராட்சி 10 ஆவது வாா்டு குடியிருப்புப் பகுதியில் மழைநீா் சூழ்ந்துள்ளது. இப்பகுதிக்கு மனிதநேய ஜனநாயக கட்சியின் பேரிடா் மீட்புக் குழுவினா் நேரில் சென்று குறைகளை கேட்டறிந்தனா். அப்போது, சாலை மற்றும் தெருவிளக்கு வசதி ஏற்படுத்த வேண்டும் என்றும் அரசு விரைவில் நிவாரணம் வழங்க வலியுறுத்த வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கேட்டுக்கொண்டனா்.
இதில், மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்டச் செயலாளா் சங்கை தாஜ்தீன், மாவட்ட பொருளாளா் தைக்கால் ஷாஜஹான் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.