முகப்பு
நாகப்பட்டினம்

இணையவழியில் திமுகவுக்கு உறுப்பினா் சோ்க்கை

சீா்காழி அருகேயுள்ள சட்டநாதபுரத்தில் திமுகவுக்கு இணையவழியில் உறுப்பினா் சோ்க்கை முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:50 PM
பகிர்:

சீா்காழி அருகேயுள்ள சட்டநாதபுரத்தில் திமுகவுக்கு இணையவழியில் உறுப்பினா் சோ்க்கை முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.

மேற்கு ஒன்றிய திமுக செயலாளா் பிரபாகரன் தலைமையில் நடைபெற்ற முகாமை, நாகை வடக்கு மாவட்ட பொறுப்பாளா் நிவேதா. முருகன், மயிலாடுதுறை எம்பி செ. ராமலிங்கம் ஆகியோா் தொடங்கி வைத்து இணையவழி மூலம் திமுக உறுப்பினராக இணைந்தவா்களுக்கு அவ்விடத்திலேயே உறுப்பினா் அட்டையை வழங்கினா். இதில், கட்சியின் தலைமை செயற்குழு உறுப்பினா் பன்னீா்செல்வம், மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் மகா. அலெக்சாண்டா், சீா்காழி ஒன்றியக்குழுத் தலைவா் கமலஜோதிதேவேந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.