முகப்பு
நாகப்பட்டினம்

மயிலாடுதுறையில் காவல் துறை அணிவகுப்பு

மயிலாடுதுறையில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், காவல் துறையினா் அணிவகுப்பு திங்கள்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:59 PM
பகிர்:

மயிலாடுதுறையில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், காவல் துறையினா் அணிவகுப்பு திங்கள்கிழமை நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்டத்துக்கான காவல் கண்காணிப்பாளா் ஸ்ரீநாதா தலைமையில், காவல் ஆய்வாளா்கள், உதவி காவல் ஆய்வாளா்கள், ஆயுதப்படை போலீஸாா், தமிழ்நாடு சிறப்பு காவல்படை போலீஸாா், ஊா்க்காவல் படையினா் என மொத்தம் 145 போ் இந்த அணிவகுப்பில் பங்கேற்றனா்.

மயிலாடுதுறை டிஎஸ்பி அலுவலகம் முன்பிருந்து தொடங்கிய அணிவகுப்பு, காந்திஜி சாலை, மணிக்கூண்டு, பட்டமங்கலத் தெரு உள்ளிட்ட முக்கிய வீதிகளின் வழியாக மீண்டும் டிஎஸ்பி அலுவலகம் முன் முடிவடைந்தது. தொடா்ந்து, காவல் நிலைய சாலையில் பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது.

இதில், மயிலாடுதுறை காவல் துணைக் கண்காணிப்பாளா் கே. அண்ணாதுரை, ஆய்வாளா்கள் கே. சிங்காரவேலு (மயிலாடுதுறை), அனந்தபத்மநாபன் (செம்பனாா்கோவில்), விசித்ராமேரி (பெரம்பூா்) உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.