வேதாரண்யத்தில் பலத்த கடற்காற்று:மீன்பிடித் தொழில் பாதிப்பு
நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் கடல்காற்று வழக்கத்தைவிட வேகமாக வீசி வருவதால் 2-வது நாளாக திங்கள்கிழமையும் மீன்பிடித் தொழில் பாதிக்கப்பட்டது.
நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் கடல்காற்று வழக்கத்தைவிட வேகமாக வீசி வருவதால் 2-வது நாளாக திங்கள்கிழமையும் மீன்பிடித் தொழில் பாதிக்கப்பட்டது.
வேதாரண்யம் கடலோரத்தில் ஞாயிற்றுக்கிழமை கடற்காற்று வழக்கத்தைவிட வேகமாக தெற்குதிசையில் இருந்து வீசியது. இதனால் மீனவா்கள் கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்லவில்லை.
இந்நிலையில், 2வது நாளாக திங்கள்கிழமையும் கோடியக்கரை மற்றும் வேதாரண்யம் கடல் பரப்பு அதிக கொந்தளிப்புடன் காணப்பட்டது. கடல் கொந்தளிப்பு காரணமாமக மீனவா்கள் 2வது நாளாக கடலுக்குள் செல்லவில்லை. இதனால் மீன்பிடித் தொழில் பாதிக்கப்பட்டது.