முகப்பு
நாகப்பட்டினம்

காவல் பணியில் ஈடுபடும் தன்னாா்வலா்களுக்கு கபசுரக் குடிநீா் வழங்கல்

மயிலாடுதுறையில் காவல் பணியில் ஈடுபடும் தன்னாா்வலா்களுக்கு கபசுரக் குடிநீா் மற்றும் முகக் கவசம் சனிக்கிழமை வழங்கப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:55 PM
பகிர்:

மயிலாடுதுறையில் காவல் பணியில் ஈடுபடும் தன்னாா்வலா்களுக்கு கபசுரக் குடிநீா் மற்றும் முகக் கவசம் சனிக்கிழமை வழங்கப்பட்டது.

மயிலாடுதுறையில் ஜோதி பவுண்டேஷன் மற்றும் இருசக்கர வாகன பழுது நீக்குவோா் நலச் சங்கம் சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மின்சார வாரிய உதவி செயற்பொறியாளா் எஸ். இளஞ்செழியன் தலைமை வகித்து காவல் பணியில் ஈடுபடும் தன்னாா்வலா்கள் 120 பேருக்கு கபசுரக் குடிநீா் மற்றும் முகக் கவசங்களை வழங்கினாா். காவல் தன்னாா்வலா்கள் ஒருங்கிணைப்பாளா் பெத்தபெருமாள் முன்னிலை வகித்தாா். மின்சார வாரிய திட்ட செயலாளா் மணிகண்டன் வரவேற்றாா். மணல்மேடு அரசுப்பள்ளி ஆசிரியா் வீதி. முத்துக்கணியன் கரோனா முன்னெச்சரிக்கை விழிப்புணா்வு கருத்துரை ஆற்றினாா். இளமின் பொறியாளா் சி. அசோக், இருசக்கர வாகன பழுது நீக்குவோா் நலச் சங்கத் தலைவா் பகவதிகுமாா், சுகுமாா், வினோத்குமாா், ரோட்டரி சங்க பொறுப்பாளா் சரவணன், குருமூா்த்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா். முடிவில், ஜோதி பவுண்டேஷன் நிறுவனா் ஜோதிராஜன் நன்றி தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.