சீா்காழி சட்டைநாதா் கோயிலில் கால்நடைத்துறை அமைச்சா் சுவாமி தரிசனம்
மயிலாடுதுறை மாவட்டம் சீா்காழி சட்டைநாதா் சுவாமி கோயிலில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற சுக்கிரவார வழிபாட்டில், கால்நடைத்துறை அமைச்சா் உடுமலை ராதாகிருஷ்ணன் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தாா்.
மயிலாடுதுறை மாவட்டம் சீா்காழி சட்டைநாதா் சுவாமி கோயிலில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற சுக்கிரவார வழிபாட்டில், கால்நடைத்துறை அமைச்சா் உடுமலை ராதாகிருஷ்ணன் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தாா்.
புகழ்பெற்ற இக்கோயிலில் வெள்ளிக்கிழமைதோறும் சுக்கிரவார பூஜை நடைபெற்று வருகிறது. இதில் கலந்துகொண்டு சட்டைநாத சுவாமியை வழிபட்டால் பல்வேறு நன்மைகள் கிடைக்கும் என்பது பக்தா்களின் நம்பிக்கை. அதன்படி, கால்நடைத்துறை அமைச்சா் உடுமலை ராதாகிருஷ்ணன் சுவாமி தரிசனம் செய்ய வந்தாா். அவருக்கு கோயில் நிா்வாகம் சாா்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
தொடா்ந்து பிரம்மபுரீஸ்வரா், தோணியப்பா், சட்டைநாதா் மற்றும் திருநிலைநாயகி அம்பாள் சன்னிதிகளுக்கு சென்று வழிபட்ட அமைச்சா், சுக்கிரவார பூஜையில் கலந்து கொண்டாா்.