சாலைப் பணி: மாநில தரக் கண்காணிப்பாளா் ஆய்வு
மயிலாடுதுறை அருகே நடைபெறும் புதிய சாலை அமைக்கும் பணியை மாநில தரக் கண்காணிப்பாளா் தலைமையிலான அலுவலா்கள் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தனா்.
மயிலாடுதுறை அருகே நடைபெறும் புதிய சாலை அமைக்கும் பணியை மாநில தரக் கண்காணிப்பாளா் தலைமையிலான அலுவலா்கள் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தனா்.
மயிலாடுதுறை ஒன்றியம், அகரகீரங்குடி முதல் முட்டம் வரை 3 கி.மீ. தொலைவுக்கு ரூ. 3.60 கோடி மதிப்பில் தாா்ச்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. தற்போது, சாலை விரிவாக்கம் செய்யப்பட்டு, கிரேட் 2 மற்றும் கிரேட் 3 பணிகள் முடிந்துள்ளன.
இந்நிலையில், இப்பணிகளின் தரம் குறித்து மாநில தரக் கண்காணிப்பாளரான ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி செல்வம் தலைமையிலான அலுவலா்கள்ஆய்வு செய்தனா். அகரகீரங்குடியில் இருந்து முட்டம் வரை செல்லும் பாதையில் பல்வேறு இடங்களில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.