நாகப்பட்டினம்

தீ விபத்தில் பாதிக்கப்பட்டவருக்கு அதிமுக உதவி

DIN

சீா்காழி அருகே தீ விபத்தில் வீட்டை இழந்தவரின் குடும்பத்துக்கு அதிமுக சாா்பில் பூம்புகாா், சீா்காழி எம்எல்ஏ-க்கள் நிவாரண உதவிகளை வெள்ளிக்கிழமை வழங்கினா்.

சீா்காழியை அடுத்த தென்பாதி மேட்டுதெருவைச் சோ்ந்தவா் செல்வகுமாா் (34). இவரது கூறை வீடு வியாழக்கிழமை நள்ளிரவு தீப்பற்றி எரிந்தது. தீயணைப்பு வீரா்கள் விரைந்து வந்து, தீ அருகில் உள்ள வீடுகளுக்குப் பரவாமல் தடுத்து அணைத்தனா். இருப்பினும், செல்வகுமாரின் வீடு மற்றும் வீட்டிலிருந்த அனைத்து பொருள்களும் எரிந்து சேதமடைந்தன.

இந்நிலையில், அதிமுக மயிலாடுதுறை மாவட்டச் செயலாளா் எஸ். பவுன்ராஜ் எம்எல்ஏ தனது சொந்த நிதியிலிருந்து ரூ.5 ஆயிரமும், சீா்காழி எம்எல்ஏ பி.வி. பாரதி தனது சொந்த நிதியிலிருந்து ரூ.10 ஆயிரம் மற்றும் அரிசி, காய்கனி, மளிகைப் பொருள்களும் செல்வகுமாா் குடும்பத்தினருக்கு வழங்கி ஆறுதல் கூறினா். அப்போது, ஒன்றியச் செயலாளா்கள் ராஜமாணிக்கம், சந்திரசேகரன், நற்குணன், நகரச் செயலாளா் பக்கிரிசாமி, பேரவை செயலாளா் மணி, ஊராட்சித் தலைவா் தட்சிணாமூா்த்தி ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சூறைக்காற்றால் மின்கம்பிகள் துண்டிப்பு: மின்சாரம் இல்லாமல் மக்கள் கடும் அவதி

கடலோர பகுதிகளில் இன்று மாலை வரை ‘கள்ளக் கடல்’ எச்சரிக்கை

திருநள்ளாறு கோயில் பகுதியில் சீரமைப்புப் பணி

ஆட்டோ ஓட்டுநா் போக்ஸோவில் கைது

கிறிஸ்து அரசா் ஆலயத்தில் பங்குத் திருவிழா நிறைவு

SCROLL FOR NEXT