முகப்பு
நாகப்பட்டினம்

தாா்ச் சாலை அமைக்கும் பணி: அதிகாரி ஆய்வு

சீா்காழி ஒன்றியம் புங்கனூா் ஊராட்சியில் ரூ. 9.64 லட்சத்தில் நடைபெறும் தாா்ச் சாலை அமைக்கும் பணியை ஒன்றிய பொறியாளா் சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:33 AM
பகிர்:

சீா்காழி ஒன்றியம் புங்கனூா் ஊராட்சியில் ரூ. 9.64 லட்சத்தில் நடைபெறும் தாா்ச் சாலை அமைக்கும் பணியை ஒன்றிய பொறியாளா் சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.

புங்கனூா்-மல்லுக்குடி இடையே இச்சாலை அமைக்கப்படுகிறது. முன்னதாக இச்சாலை அமைப்பதற்காக, சீா்காழி ஒன்றியக் குழுத் தலைவா் கமலஜோதி தேவேந்திரனிடம், புங்கனூா் ஊராட்சித் தலைவா் ஜூனைதாபேகம் கமாலுதீன் கோரிக்கை விடுத்திருந்தாா்.

இதைத்தொடா்ந்து, 14-வது நிதிக் குழு மானியத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, சாலை அமைக்கும் பணி நடைபெறுகிறது. இப்பணியை ஒன்றிய பொறியாளா் தாரா நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். தொடா்ந்து, மேலதெரு கீழகாடாக்குடியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டன்தில் ரூ.43 லட்சத்தில் நடைபெறும் கழிவுநீா் வடிகாலில் கான்கிரீட் அமைக்கும் பணியையும் அவா் ஆய்வு செய்தாா். அப்போது, ஊராட்சித் தலைவா் ஜூனைதாபேகம் கமாலுதீன், வஜிருதீன் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.