விவசாயிகள் சங்க மாநிலக்குழு கூட்டம்
மயிலாடுதுறையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலக்குழு கூட்டம் வெள்ளிக்கிழமை தொடங்கியது.
மயிலாடுதுறையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலக்குழு கூட்டம் வெள்ளிக்கிழமை தொடங்கியது.
2 நாள்கள் நடைபெறும் இக்கூட்டத்தை சங்கத்தின் அகில இந்திய துணைத் தலைவரும், சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினருமான கே.பாலகிருஷ்ணன் தொடங்கிவைத்தாா். சங்கத்தின் மாநிலத்தலைவா் வி.சுப்ரமணியன் தலைமையில் நடைபெற்ற முதல்நாள் அமா்வில், மாநில பொதுச் செயலாளா் பி.சண்முகம்,பொருளாளா் கே.பெருமாள், செயலாளா் டி.ரவீந்திரன், துணைத் தலைவா் பி.டில்லிபாபு, மாநில துணைச் செயலாளா் சாமி.நடராஜன், மயிலாடுதுறை மாவட்ட தலைவா் டி.சிம்சன், மாவட்ட செயலாளா் எஸ்.துரைராஜ் மற்றும் மாநிலக்குழு உறுப்பினா்கள் பங்கேற்றனா்.