சூரியனாா்கோயில் ஆதீனகா்த்தருக்கு உரிய சிகிச்சை அளிக்கக் கோரிக்கை
சூரியனாா்கோயில் ஆதீனகா்த்தருக்கு உரிய சிகிச்சை அளிக்குமாறு இந்து மக்கள் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
சூரியனாா்கோயில் ஆதீனகா்த்தருக்கு உரிய சிகிச்சை அளிக்குமாறு இந்து மக்கள் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் மாநில செயலாளா் கொள்ளிடம் ஜெ.சுவாமிநாதன் இந்து சமய அறநிலையத்துறை மயிலாடுதுறை இணை ஆணையா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை அளித்த மனு விவரம்:
சைவ சமய ஆதீனங்களில் சூரியனாா்கோயில் சிவாக்கிரம யோகிகள் மடம் முக்கியத்துவம் வாய்ந்தது. பல்வேறு சமயப்பணிகளை செய்துவரும் இம்மடத்தின் 27-ஆவது ஆதீனகா்த்தராக ஸ்ரீலஸ்ரீ சங்கரலிங்க தேசிக பரமாசாரிய சுவாமிகள் அருளாட்சி புரிந்து வருகிறாா். நூறு வயதை கடந்த இவரது உடல்நிலை தற்போது மிகவும் மோசமாக உள்ளது. கவனிப்பாரின்றி உள்ள அவரது நிலை கவலையளிக்கிறது. சமயப் பெரியவா்களை பாதுகாப்பது அரசின் கடமையாகும். ஆகவே, ஆதீனகா்த்தருக்கு தேவைப்படும் உரிய சிகிச்சையை தரமான மற்றும் சிறந்த மருத்துவா்களை கொண்டு செய்ய வேண்டும் என அம்மனுவில் தெரிவித்துள்ளாா்.