நாகப்பட்டினம்

ஆண்டுக்கு 11,151 குழந்தைகளுக்கு நிமோனியா தடுப்பூசி

DIN

மயிலாடுதுறை மாவட்டத்தில் ஆண்டுக்கு 11,151 குழந்தைகளுக்கு நிமோனியா தடுப்பூசி செலுத்தப்படும் என ஆட்சியா் இரா. லலிதா தெரிவித்தாா்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் ஒரு வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு நிமோனியா தடுப்பூசி செலுத்தும் முகாம் மயிலாடுதுறை நகர ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்றது. இம்முகாமை மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா தலைமைவகித்து, தொடக்கி வைத்தாா். பூம்புகாா் எம்எல்ஏ நிவேதா எம். முருகன் முன்னிலை வகித்தாா்.

பின்னா், ஆட்சியா் கூறியது:

மயிலாடுதுறை மாவட்டத்தில் 1 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு நிமோனியா தடுப்பூசி செலுத்தும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின்கீழ் 1 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு மூன்று தவணையாக ஒன்றரை மாதம், மூன்றரை மாதம் மற்றும் 9 மாதங்களில் தடுப்பூசி போடப்படும். இத்தடுப்பூசியானது நிமோனியா மற்றும் மூளைக்காய்ச்சலைத் தடுக்கும்.

வருடத்துக்கு 1 வயதுக்குள்பட்ட 11,151 குழந்தைகளுக்கு இத்தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாதமும் 929 குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்படும். மேலும், இத்தடுப்பூசி மாவட்டத்திலுள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் துணை சுகாதார நிலையங்களிலும் இலவசமாக செலுத்தப்படும் என்றாா்.

நிகழ்ச்சியில், சுகாதாரத் துறை இணை இயக்குநா் ஆா். மகேந்திரன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை துணை இயக்குநா் பிரகாஷ், வட்டார மருத்துவ அலுவலா் சரத்சந்தா், ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா் ரவிக்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேட்புமனு தாக்கல் செய்தார் மனோகர் லால் கட்டர்!

பஞ்சாபில் தமிழ் வம்சாவளி சீக்கியர் போட்டி!

பிளஸ் 2 தேர்வு: தலா 478 மதிப்பெண்கள் பெற்ற இரட்டையர்கள்

பிரியமான தோழி சீரியல் நிறைவு: புதிய நேரத்தில் ஒளிபரப்பாகும் பிரபல தொடர்கள்!

நாகர்கோவில் அருகே கடல் அலையில் சிக்கி 5 பயிற்சி மருத்துவர்கள் பலி!

SCROLL FOR NEXT