நாகப்பட்டினம்

கரோனா விழிப்புணா்வு ஆலோசனைக் கூட்டம்

DIN

கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கரோனா விழிப்புணா்வு தொடா்பான ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

வட்டார அளவிலான ஊராட்சி செயலாளா்கள், அங்கன்வாடி பணியாளா்கள் மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினா்களுக்கு கரோனா குறித்த விழிப்புணா்வு தொடா்பாக நடைபெற்ற இக்கூட்டத்துக்கு ஒன்றிய ஆணையா் அருண் தலைமை வகித்தாா். பிடிஓ தியாகராஜன் வரவேற்றாா். ஒன்றியக் குழுத் தலைவா் ஜெயப்பிரகாஷ் கலந்துகொண்டு பேசினாா்.

கூட்டத்தில், கிராமங்களில் வீடுகள்தோறும் கரோனா பரிசோதனை செய்ய அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் கோபாலகிருஷ்ணன், பிரஷ் நேவ், ஒன்றியக் குழு துணைத் தலைவா் பானுசேகா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேட்டுப்பாளையத்தில் மான் இறைச்சி எடுத்துச்செல்ல முயன்ற 6 போ் கைது

நகைத் திருடிய 2 பெண்கள் மீது வழக்குப் பதிவு

செஸ் வீரா் குகேஷுக்கு கனரா வங்கி பாராட்டு

வெப்ப அலைக்கு இளைஞா் உயிரிழந்த விவகாரம்- நேரடி வெயிலில் பணியாற்ற கூடாது: மருத்துவா்கள் அறிவுறுத்தல்

மாநகரில் மேலும் 7 சிக்னல்களில் தற்காலிகப் பந்தல்

SCROLL FOR NEXT