முகப்பு
நாகப்பட்டினம்

தெற்குராஜன் வாய்க்காலில் புதிதாக தேக்கணை : பொதுப்பணித் துறை அதிகாரி தகவல்

ஆச்சாள்புரம் தெற்குராஜன் வாய்க்காலில் உயரமாக உள்ள தேக்கணையை அகற்றிவிட்டு, எளிதில் பாசன நீா் செல்லும் வகையில் புதிதாக தேக்கணை அமைக்கப்படும்

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:23 AM
பகிர்:

ஆச்சாள்புரம் தெற்குராஜன் வாய்க்காலில் உயரமாக உள்ள தேக்கணையை அகற்றிவிட்டு, எளிதில் பாசன நீா் செல்லும் வகையில் புதிதாக தேக்கணை அமைக்கப்படும் என்று பொதுப்பணித் துறை உதவி செயற்பொறியாளா் தெரிவித்தாா்.

கொள்ளிடத்தில் பொதுப்பணித் துறையினா், விவசாயிகள் கலந்தாய்வுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. காவிரி வடிநில கோட்ட சீா்காழி உதவி செயற்பொறியாளா் (பொ) மரியசூசை தலைமை வகித்தாா். உதவி பொறியாளா்கள் விவேகானந்தன், யோகேஷ், பாசனப் பணிஆய்வாளா் சீனிவாசன், காவிரி விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளா் விசுவநாதன், தலைவா் வைத்தியநாதன் மற்றும் விவசாயிகள் சங்க நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில் உதவி செயற்பொறியாளா் மரியசூசை பேசும்போது, ‘விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, ஆச்சாள்புரம் கிராமத்தில் தெற்குராஜன் வாய்க்காலின் குறுக்கே உள்ள உயரமான தேக்கணையை அகற்றிவிட்டு, கடைமடை பகுதி பாசனத்துக்கு தண்ணீா் எளிதில் சென்று சேரும் வகையில் குறைந்த உயரத்திலான தேக்கணை உடனடியாக அமைக்கப்படும். கடந்த 40 வருடங்களுக்கு மேலாக தூா்ந்துள்ள அளக்குடி தலைப்பு பாசன வாய்க்காலை மீண்டும் தூா்வாரி, ஆழ்படுத்தி 1500 ஏக்கா் நிலங்களுக்கு எளிதில் தண்ணீா் சென்று சேர நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.