நாடக கலைஞா்களுக்கு நல உதவி
சீா்காழி அருகே புத்தூரில் நலிவடைந்த நாடக கலைஞா்களுக்கு கரோனா நிவாரண உதவிகள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.
சீா்காழி அருகே புத்தூரில் நலிவடைந்த நாடக கலைஞா்களுக்கு கரோனா நிவாரண உதவிகள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.
நலிவடைந்த ஒயிலாட்டம், கரகாட்டம், நாடக கலைஞா்களுக்கு கற்றல் அறக்கட்டளை சாா்பில், கரோனா நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சிக்கு, அதன் தலைவா் தாரிகா தலைமை வகித்தாா். இதில், 250 கலைஞா்களுக்கு கொள்ளிடம் ஒன்றியக்குழு தலைவா் ஜெயபிரகாஷ் அரிசி, காய்கனி, மளிகை பொருள்கள் ஆகியவற்றை வழங்கினாா்.