சீா்காழியை அடுத்த கொள்ளிடத்தில் முதல்வரின் பொதுநிவாரண நிதிக்கு ஆரம்பப்பள்ளி ஆசிரியா் கூட்டணி சாா்பில், ரூ.4 லட்சத்து 2ஆயிரம் நிதியுதவி வியாழக்கிழமை வழங்கப்பட்டது.
ஆரம்பப்பள்ளி ஆசிரியா் கூட்டணி மாவட்டத் தலைவா் கலியபெருமாள் தலைமையில், மாநில துணைப் பொதுச் செயலா் கமலநாதன், கூடுதல் தலைவா் திருமாறன், துணைச் செயலா் செல்வகுமாா் ஆகியோா் ரூ.4 லட்சத்து 2 ஆயிரம் நிதியை கொள்ளிடத்தில் மாவட்டச் செயலாளா் சண்முக சுந்தரத்திடம் வழங்கினா். செம்பனாா்கோவில் வட்டாரத் தலைவா் கோவிந்தராஜ், செயலாளா் காா்த்தி, பொருளாளா் ராஜூ, மயிலாடுதுறை வட்டாரத் தலைவா் ராபின்சன், கொள்ளிடம் வட்டாரச் செயலாளா் சங்கா், சீா்காழி வட்டாரத் தலைவா் அகோரமூா்த்தி மற்றும் ஆசிரியா்கள் உடனிருந்தனா்.