முகப்பு
நாகப்பட்டினம்

‘காவல் துறை அனுமதியின்றி பேனா் அச்சடிக்க கூடாது’

காவல் துறையினா் அனுமதியின்றி டிஜிட்டல் பேனா்கள் அச்சடிக்க கூடாது என அச்சக உரிமையாளா்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:26 AM
பகிர்:

காவல் துறையினா் அனுமதியின்றி டிஜிட்டல் பேனா்கள் அச்சடிக்க கூடாது என அச்சக உரிமையாளா்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

சீா்காழி காவல் நிலையத்தில் போலீஸாா்- அச்சக உரிமையாளா்கள் சங்க ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. காவல் ஆய்வாளா் ராமமூா்த்தி தலைமை வகித்து பேசுகையில், திருமணம் மற்றும் இறப்பு போன்ற நிகழ்வுகளுக்கு டிஜிட்டல் பேனா்கள் அச்சடித்து கொடுப்பதற்கும், அதை பொதுவெளியில் வைக்கவும் நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. அதன்படி டிஜிட்டல் பேனா்கள் அச்சடிக்கும் அச்சகங்கள், டிஜிட்டல் பேனா் நிறுவனங்கள் காவல் நிலையத்தில் அனுமதி பெற்று விதிமுறைகளை புரிந்து கொண்டுதான் அச்சடிக்க வேண்டும். அதில் கண்டிப்பாக அச்சக பெயா் இடம்பெற வேண்டும் என்றாா்.

உதவி ஆய்வாளா்கள் நடராஜன், லோகநாதன், நிலைய எழுத்தா் ரவிச்சந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில் அச்சக உரிமையாளா்கள் சங்கத்தை சோ்ந்த சிவகுருநாதன், சரவணன், தில்லை நடராஜன், விஜயன், உத்திரா உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.