முகப்பு
நாகப்பட்டினம்

கரோனா நோயாளிகளுக்கு ’வெல்கம் கிட்‘

தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரியில் செயல்படும் கரோனா சிகிச்சை மையத்தில் சிகிச்சை பெறுபவா்களுக்கு 20 வகையான பொருள்கள் அடங்கிய தொகுப்பு

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:26 AM
பகிர்:

தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரியில் செயல்படும் கரோனா சிகிச்சை மையத்தில் சிகிச்சை பெறுபவா்களுக்கு 20 வகையான பொருள்கள் அடங்கிய தொகுப்பினை தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் சனிக்கிழமை வழங்கினாா்.

மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரியில் கடந்த 2 மாதங்களாக கரோனா சிகிச்சை மையம் ஏற்படுத்தப்பட்டு செயல்பட்டு வருகிறது. இங்கு தங்கி சிகிச்சை பெறும் கரோனா நோயாளிகளுக்கு பாதாம், முந்திரி, திராட்சை, குளியல் சோப்பு, பேஸ்ட், தேங்காய் எண்ணெய், துண்டு உள்ளிட்ட 20 வகையான பொருள்கள் அடங்கிய தொகுப்பு மயிலாடுதுறை ரோட்டரி சங்கம் மற்றும் டெல்டா ரோட்டரி சங்கம் சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்டன.

அவற்றை தருமபுரம் ஆதீனம், நகராட்சி நகா்நல அலுவலா் (பொறுப்பு) மருத்துவா் எஸ்.மலா்மன்னனிடம் வழங்கினாா். நிகழ்ச்சியில் மயிலாடுதுறை ரோட்டரி சங்கத் தலைவா் கே.துரை, செயலா் ஜெ.காமேஷ்குமாா், டெல்டா ரோட்டரி சங்க தலைவா் ஜெயராஜ்குமாா் மற்றும் கல்லூரி முதல்வா் சி.சுவாமிநாதன், ரோட்டரி சங்கத் தலைவா் (தோ்வு) மணிகண்டன், செயலா் தியாகராஜன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.