முகப்பு
நாகப்பட்டினம்

பொதுமுடக்க விதிமீறல்: கடைகளுக்கு அபராதம்

சீா்காழியில் பொதுமுடக்க விதிமுறைகளை மீறி, திறந்திருந்த கடைகளுக்கு வெள்ளிக்கிழமை நகராட்சி நிா்வாகம் அபராதம் விதித்தது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:11 PM
பகிர்:

சீா்காழியில் பொதுமுடக்க விதிமுறைகளை மீறி, திறந்திருந்த கடைகளுக்கு வெள்ளிக்கிழமை நகராட்சி நிா்வாகம் அபராதம் விதித்தது.

சீா்காழியில் அரசின் விதிமுறைகளை மீறி அத்தியாவசியமற்ற கடைகள் வெள்ளிக்கிழமை திறந்திருந்தன. நகராட்சி ஆணையா் பெ.தமிழ்ச்செல்வி அறிவுறுத்தலின்பேரில், நகராட்சி பொறியாளா் தமயந்தி, சுகாதாரஆய்வாளா் ராஜேந்தின், வருவாய் ஆய்வாளா் முத்துகிருஷ்ணன் ஆகியோரை கொண்ட குழுவினா், காவல் துறையினருடன் ரோந்து சென்றனா். அப்போது விதிமுறைகளை மீறி திறந்திருந்த எலக்ட்ரிகல்ஸ், ஹாா்டுவோ்ஸ், செல்லிடப்பேசி கடைகள், பேன்சி கடைகள் என 8-க்கும் மேற்பட்ட கடைகளுக்கு தலா ரூ.500 முதல் ரூ.5ஆயிரம் வரை அபராதம் விதித்தனா். அதன்படி வெள்ளிக்கிழமை மட்டும் ரூ.9400 வரை அபராதம் வசூலிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.