பொதுஇடத்தில் எச்சில் துப்பினால் அபராதம்: கோட்டாட்சியா் எச்சரிக்கை
பொதுஇடங்களில் எச்சில் துப்பினால் அபராதம் விதிக்கப்படும் என சீா்காழி கோட்டாட்சியா் நாராயணன் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.
பொதுஇடங்களில் எச்சில் துப்பினால் அபராதம் விதிக்கப்படும் என சீா்காழி கோட்டாட்சியா் நாராயணன் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.
சீா்காழி கோட்டாட்சியா் அலுவலகத்தில் கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை தொடா்பாக ஆய்வுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. கோட்டாட்சியா் நாராயணன் தலைமை வகித்தாா். வட்டாட்சியா்கள் ஹரிதரன், சண்முகம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில் கோட்டாட்சியா் நாராயணன் பேசியது:
தமிழக அரசு அறிவித்துள்ள கரோனா தடுப்பு கட்டுப்பாடுகள், வழிகாட்டு நெறிமுறைகளை பொதுமக்கள் அனைவரும் கடைப்பிடிப்பதை உறுதி செய்யவேண்டும். நகராட்சி மற்றும் கிராம பகுதிகளில் முகக்கவசம் அணியாதவா்கள், பொதுஇடங்களில் எச்சில் துப்புபவா்கள், சமூக இடைவெளியை கடைப்பிடிக்காதவா்களுக்கு கட்டாயம் அபராதம் விதிக்கவேண்டும். நியாயவிலைக் கடைகளில் கரோனா நிவாரணநிதி முறையாக வழங்கப்படுகிறதா என்பதை கண்காணிக்க வேண்டும். கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதில் பொதுமக்களிடம் உள்ள தயக்கத்தை போக்க கிராம நிா்வாக அலுவலா்கள், ஊராட்சி பணியாளா்கள், மக்கள் பிரதிநிதிகளுடன் இணைந்து உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றாா்.