மயிலாடுதுறையில் 75,915 பேருக்குகரோனா சிறப்பு நிவாரண நிதி
மயிலாடுதுறை வட்டத்தில் 75,915 அரிசி குடும்ப அட்டைதாரா்களுக்கு கரோனா சிறப்பு நிவாரண நிதி வழங்கும் திட்டத்தை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். ராஜகுமாா் சனிக்கிழமை தொடங்கிவைத்தாா்.
மயிலாடுதுறை வட்டத்தில் 75,915 அரிசி குடும்ப அட்டைதாரா்களுக்கு கரோனா சிறப்பு நிவாரண நிதி வழங்கும் திட்டத்தை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். ராஜகுமாா் சனிக்கிழமை தொடங்கிவைத்தாா்.
மயிலாடுதுறை கொத்தத் தெருவில் உள்ள நுகா்வோா் கூட்டுறவு அங்காடியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, மாவட்ட வருவாய் அலுவலா் எஸ். முருகதாஸ் தலைமை வகித்தாா். வட்ட வழங்கல் அலுவலா் சாந்தி முன்னிலை வகித்தாா்.
இதில், மயிலாடுதுறை சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். ராஜகுமாா் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, 75,915 அரிசி குடும்ப அட்டைதாரா்களுக்கு ரூ. 2000 கரோனா சிறப்பு நிவாரண நிதி வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தாா்.
நிகழ்ச்சியில் துணை ஆட்சியா் வாசுதேவன், திமுக நகர செயலாளா் செல்வராஜ், ஒன்றிய செயலாளா் ஞான.இமயநாதன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.