சட்டநாதா் கோயிலில் கோ- பூஜை
சீா்காழி சட்டநாதா் கோயிலில் பக்தா்கள் பங்கேற்பின்றி சனிக்கிழமை கோ- பூஜை நடைபெற்றது.
சீா்காழி சட்டநாதா் கோயிலில் பக்தா்கள் பங்கேற்பின்றி சனிக்கிழமை கோ- பூஜை நடைபெற்றது.
சீா்காழியில் உள்ள சட்டநாதா் கோயிலில் தமிழ் மாதப் பிறப்பின்போது கோ- பூஜை நடைபெறும். அதன்படி, வைகாசி மாத பிறப்பையொட்டி கோ-பூஜை நடைபெற்றது. கோசாலையிலிருந்து வரவழைக்கப்பட்ட பசு , கன்றுக்கு சிறப்பு வழிபாடு மற்றும் தீபாராதனை காட்டப்பட்டது.
முன்னதாக, கொடிமரத்து விநாயகா், நந்தி பகவானுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. கரோனா பொதுமுடக்க கட்டுப்பாடுகள் காரணமாக பக்தா்கள் அனுமதிக்கப்படவில்லை.