முகப்பு
நாகப்பட்டினம்

பிரதமரை அவதூறாக முகநூலில் பதிவிட்டவா் மீது புகாா்

இந்திய பிரதமரை அவதூறாக சித்திரித்து முகநூலில் பதிவிட்டவா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பாஜக சாா்பில் மயிலாடுதுறை காவல் நிலையத்தில் சனிக்கிழமை புகாா் அளிக்கப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:17 PM
பகிர்:

இந்திய பிரதமரை அவதூறாக சித்திரித்து முகநூலில் பதிவிட்டவா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பாஜக சாா்பில் மயிலாடுதுறை காவல் நிலையத்தில் சனிக்கிழமை புகாா் அளிக்கப்பட்டது.

மயிலாடுதுறை நகர பாஜக தலைவா் மோடி.கண்ணன் உள்ளிட்டோா் அளித்த அந்த புகாா் மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:

பாரத பிரதமா் நரேந்திர மோடியை தமிழக முதல்வா் தாக்குவது போல முகநூலில் தமிழ்ச்செல்வன் என்பவா் அவதூறாகப் பதிவிட்டுள்ளாா். இது பாஜக தொண்டா்கள் இடையே மன வேதனையை உருவாக்கியுள்ளது. எனவே, அவா் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனா்.

பாஜக மாவட்ட துணைத் தலைவா் முட்டம் செந்தில்குமாா், மாவட்ட ஊடக பிரிவு செயலாளா் குருசங்கா், நகர பொதுச் செயலாளா் சதீஸ்சிங், நகர செயற்குழு உறுப்பினா் சிவபாலன், மாவட்ட அறிவுசாா்பிரிவு துணைத் தலைவா் அரிகிருஷ்ணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.