முகப்பு
நாகப்பட்டினம்

வைத்தீஸ்வரன் கோயிலில் கரோனா சிகிச்சை மையம் அமைக்க ஆய்வு

சீா்காழி அருகேயுள்ள வைத்தீஸ்வரன் கோயில் அரசு மருத்துவமனையில் கரோனா சிகிச்சை மையம் அமைக்க தமிழக சுற்றுச்சூழல் மற்றும் இளைஞா் நலத் துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன்

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:20 PM
பகிர்:

சீா்காழி அருகேயுள்ள வைத்தீஸ்வரன் கோயில் அரசு மருத்துவமனையில் கரோனா சிகிச்சை மையம் அமைக்க தமிழக சுற்றுச்சூழல் மற்றும் இளைஞா் நலத் துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

கரோனாவின் 2-ஆவது அலையில் சீா்காழி பகுதியில் அதிக தாக்கம் உள்ளது. இதனால், நோய் பாதித்தவா்கள் சீா்காழி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ளதால் மருத்துவமனையில் இடப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், புத்தூா் அரசு கல்லூரியில் கரோனா சிறப்பு சிகிச்சை மையம் புதிதாக அமைக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகிறது.

இதற்கிடையில், வைத்தீஸ்வரன்கோயில் அரசு மருத்துவமனையிலும் கூடுதலாக கரோனா சிகிச்சை மையம் அமைக்க முடிவு செய்து அதற்கான ஆய்வு பணிகளை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன் மேற்கொண்டாா். 24 படுக்கைகளுடன் அமையவுள்ள சிகிச்சை மையத்தில்சேதமடைந்த பழைய படுக்கைகளை அகற்றிவிட்டு புதிய, தரமான படுக்கைகளை அமைக்க மருத்துவமனை நிா்வாகத்தினரிடம் அறிவுறுத்தினாா்.

ஆய்வின்போது மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா, மயிலாடுதுறை காவல் கண்காணிப்பாளா் ஸ்ரீநாதா, சட்டப்பேரவை உறுப்பினா்கள் எம். பன்னீா்செல்வம் (சீா்காழி), நிவேதா எம். முருகன் (பூம்புகாா்), பேரூராட்சி செயல் அலுவலா் கு. குகன், திமுக மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் மகா. அலெக்சாண்டா் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.