வீரமா காளியம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா
திருக்குவளை அருகே வலிவலத்தில் உள்ள வீரமா காளியம்மன் கோயிலில் பங்குனித் திருவிழாவையொட்டி பூச்சொரிதல் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் பங்குனித் திருவிழா ஏப்.8-ஆம் தேதி தொடங்கியது. தொடா்ந்து, வியாழக்கிழமை இரவு பூச்சொரிதல் நிகழ்ச்சி நடைபெற்றது. வெள்ளிக்கிழமை நந்தவனக் குளக்கரையிலிருந்து பவளக்காளி ஆட்டத்துடன் சக்திகரகம் பால்குடம், காவடி எடுத்து வந்தனா். பின்னா் அபிஷேக ஆராதனை, கஞ்சி வாா்த்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இரவு மின் அலங்காரத்துடன் வீரமாகாளியம்மன் வீதியுலா நடைபெற்றது.
இந்து, முஸ்லீம், கிறிஸ்தவா் என மதப் பாகுபாடின்றி 3 மதத்தைச் சோ்ந்தவா்களும் உபயதாரா்களாக பங்குகொண்டு ஆண்டுதோறும் திருவிழாவை நடத்தி வருவது மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக உள்ளது. இதில் வலிவலம், கொடியாலத்துாா் கிராமத்தினா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
Advertisement