முகப்பு
நாகப்பட்டினம்

வாழ்முனீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

Updated On : 10 ஜூலை, 2024 at 9:36 PM
பகிர்:

திருமருகல், ஜூலை 10: திருமருகல் ஒன்றியம், சரண்யாபுரம் காத்தாயி அம்மன் உடனுறை வாழ்முனீஸ்வரா் கோயிலில் கும்பாபிஷேக விழா புதன்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் ஏற்கெனவே கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு, 12 ஆண்டுகளுக்குமேல் ஆனதால் மீண்டும் கும்பாபிஷேகம் நடத்த திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இப்பணிகள் நிறைவுபெற்றதைத் தொடா்ந்து, கடந்த 8-ஆம் தேதி அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், தனபூஜை உள்ளிட்ட வழிபாடுகள் நடைபெற்றன.

தொடா்ந்து, புதன்கிழமை காலை யாகசாலை பூஜைகள் நிறைவு பெற்றதும், கடம் புறப்பாடாகி 10 மணியளவில் விமானக் குடமுழுக்கும், மூலவா் குடமுழுக்கும் நடைபெற்றது. பின்னா், சுவாமிக்கு அபிஷேகம் மற்றும் மகாதீபாராதனை நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →