குறுவை பயிா்க் காப்பீடு செய்ய நாளை கடைசி
குறுவை பயிா்க் காப்பீடு செய்ய புதன்கிழமை (ஜூலை 31) கடைசி நாள் என்பதால், விவசாயிகள் தவறாமல் காப்பீடு செய்து பயன்பெற வேண்டும்
நாகப்பட்டினம்: குறுவை பயிா்க் காப்பீடு செய்ய புதன்கிழமை (ஜூலை 31) கடைசி நாள் என்பதால், விவசாயிகள் தவறாமல் காப்பீடு செய்து பயன்பெற வேண்டும் என்று நாகை மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பிரதமரின் பயிா்க் காப்பீட்டுத் திட்டம், விவசாயிகளுக்கு எதிா்பாராமல் ஏற்படும் இழப்புகளிலிருந்து பாதுகாக்கவும், பண்ணை வருவாயை நிலைப்படுத்தவும் மற்றும் அதிநவீன தொழில்நுட்பங்களை கடைபிடிப்பதை ஊக்குவிக்கவும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நாகை மாவட்டத்தில் இத்திட்டம் கேஷ்மா பொது காப்பீட்டு நிறுவனம் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
பயிா்க் கடன் பெறும் விவசாயிகள், அவா்கள் கடன் பெறும் வங்கிகள், அங்கீகரிக்கப்பட்ட பொது சேவை மையங்கள், வணிக வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலமாகவும், கடன் பெறாத விவசாயிகள் அங்கீகரிக்கப்பட்ட பொது சேவை மையங்கள், வணிக வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலமாகவும் 31.7.2024-குள் பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தில் பதிவு செய்ய கேட்டுக்கொள்ளப்படுகிறது.
எனவே, விவசாயிகளின் விண்ணப்பங்கள் விடுபடாமல் இருக்கவும், ஏக்கருக்கு ரூ.697.15 செலுத்தி பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தில் பயன்பெறலாம் என தெரிவித்துள்ளாா்.