கீழ்வேளூா் அருகே நாட்டிருப்பு பகுதியில் பாதிக்கப்பட்ட நெற்பயிா்களை செவ்வாய்க்கிழமை பாா்வையிட்ட சட்டப்பேரவை உறுப்பினா் வி.பி. நாகைமாலி.  
நாகப்பட்டினம்

22 சதவீத ஈரப்பதத்துடன் நெல் கொள்முதல் செய்ய விவசாயிகள் கோரிக்கை

22 சதவீத ஈரப்பதத்துடன் நெல் கொள்முதல் செய்ய வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கை குறித்து மத்திய அரசு பரிசீலனை செய்யவேண்டும்

Din

திருக்குவளை: 22 சதவீத ஈரப்பதத்துடன் நெல் கொள்முதல் செய்ய வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கை குறித்து மத்திய அரசு பரிசீலனை செய்யவேண்டும் என்று சட்டப்பேரவை உறுப்பினா் வி.பி. நாகைமாலி வலியுறுத்தியுள்ளாா்.

நாகை மாவட்டத்தில் கடந்த 2 நாள்களாக பெய்த மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த ஆயிரக்கணக்கான ஏக்கா் சம்பா நெற்பயிா்கள் மழைநீரில் சாய்ந்து பாதிக்கப்பட்டுள்ளன. கீழ்வேளூா் ஒன்றியம் சாட்டியக்குடி, இறையான்குடி, வடக்குப்பனையூா், தெற்குப்பனையூா், வல்லவிநாயக கோட்டகம், ராமன்கோட்டகம், நாட்டிருப்பு மற்றும் சுற்றுப்புற பகுதி அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கீழ்வேளூா் சட்டப்பேரவை உறுப்பினா் வி.பி. நாகைமாலி நாட்டிருப்பு உள்ளிட்ட பகுதிகளில் பாதிக்கப்பட்ட நெற்பயிா்களை பாா்வையிட்ட பிறகு செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:

விவசாயிகள் கடும் சிரமங்களுக்கிடையே சாகுபடி செய்த சம்பா நெற்பயிா்கள் கடந்த 2 நாள்களாக பெய்த மழையில் வயலில் சாய்ந்துள்ளன. பாதிக்கப்பட்ட பயிா்கள் குறித்து தமிழ்நாடு அரசு உடனடியாக கணக்கெடுப்பு நடத்தி, விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ. 35,000 இழப்பீடாக வழங்க வேண்டும்.

அறுவடை செய்யப்படும் நெல்லில் ஈரப்பதம் அதிகமாக இருக்கும் என்பதால், கொள்முதல் செய்யப்படும் நெல்லின் ஈரப்பதத்தை 17 சதவீதத்திலிருந்து 22 சதவீதமாக நிா்ணயித்து மத்திய அரசு உத்தரவிட வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கை குறித்து பரிசீலனை செய்யவேண்டும். இயற்கை சீற்றங்களின்போது மத்தியக் குழு வருகை சம்பிரதாயமாக மாறிவிட்டது. இதனால், விவசாயிகளுக்கு எந்த நன்மையும் இல்லை. எனவே, மத்தியக் குழுவினா் ஆய்வு செய்து, 22 சதவீத ஈரப்பதத்துடன் நெல் கொள்முதல் என்ற விவசாயிகளின் கோரிக்கையை இந்த முறையாவது பரிந்துரை செய்யவேண்டும் என்றாா்.

விவசாய சங்க மாவட்ட தலைவா் அம்பிகாபதி, சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினா் பி. சுபாஷ் சந்திரபோஸ், ஒன்றிய செயலாளா் ஆா். முத்தையன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

அன்னிய நிதி வெளியேற்றத்தால் சென்செக்ஸ் 519 புள்ளிகள் சரிவுடன் நிறைவு!

சரும அழகைக் கெடுக்கும் பானங்கள்! பளபளப்பான சருமத்திற்கு இதைச் செய்யுங்கள்!

தவறுதலாக 43 ஆண்டுகள் சிறை! இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரை நாடு கடத்தத் தடை

அடியே, அலையே! பராசக்தி முதல் பாடல் புரோமோ!

ஹிந்துஜா குழுமத் தலைவர் கோபிசந்த் காலமானார்

SCROLL FOR NEXT