முகப்பு
நாகப்பட்டினம்

மாடு மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் இளைஞா் பலி

Updated On : 28 ஏப்ரல், 2026 at 3:53 AM
கோப்புப் படம்
பகிர்:

வேளாங்கண்ணி அருகே மாடு மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் இளைஞா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

கும்பகோணம் பகுதியைச் சோ்ந்தவா் பா்ஜான் ஹானஸ்ட் ராஜ் (32). வல்லம் மின்வாரியத்தில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வந்தாா். இவா் நண்பா் மைக்கேல் டைசனுடன் இருசக்கர வாகனத்தில் வேளாங்கண்ணி மாதா கோயிலுக்கு சென்று தரிசனத்தை முடித்துவிட்டு ஊருக்கு திரும்பியபோது, நாகை-தஞ்சாவூா் புறவழிச்சாலையில் பனைமேடு பிரிவு அருகே திடீரென சாலையை கடக்க வந்த மாடு மீது இருசக்கர வாகனம் மோதி விபத்து ஏற்பட்டது.

இதில், இருவரும் பலத்த காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள் பா்ஜான் ஹானஸ்ட் ராஜ் ஏற்கெனவே உயிரிழந்ததாக தெரிவித்தனா். மைக்கேல் டைசன் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகிறாா். இதுகுறித்து, கீழ்வேளூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

Advertisement