மாணவர்களுக்கு எழுது பொருள்கள்
குழந்தைகள் தினத்தையொட்டி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் மாணவர்களுக்கு நோட்டு உள்ளிட்ட எழுது பொருள்கள் புதன்கிழமை வழங்கப்பட்டன.
குழந்தைகள் தினத்தையொட்டி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் மாணவர்களுக்கு நோட்டு உள்ளிட்ட எழுது பொருள்கள் புதன்கிழமை வழங்கப்பட்டன.
குழந்தைகள் தினத்தையொட்டி காரைக்கால் நகர விஜய் மக்கள் இயக்கம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக எழுது பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி, காரைக்கால் புளியங்கொட்டை சாலையில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் புதன்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு இயக்கத்தின் நகர தலைவர் பி.யூசுப் தலைமை வகித்தார்.
பள்ளி மாணவ, மாணவியர் சுமார் 150 பேருக்கு நோட்டுப் புத்தகம், பேனா, பென்சில் உள்ளிட்ட எழுது பொருள்களை நிர்வாகிகள் வழங்கினர்.
நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள், இயக்கத்தின் நகர செயலர் ஜி.செந்தில், பொருளாளர் ஏ.வசந்தராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.