முகப்பு
காரைக்கால்

பூட்டிய கடை வாயிலில் தகவல் தாள் ஒட்டியதால் பரபரப்பு

குடிமைப் பொருள் வழங்கல் துறை மக்கள் கவனத்துக்கு தெரிவிக்கும் தகவல் தாளை, பூட்டிய கடை வாயிலில் ஒட்டியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தகவல் மக்களுக்கு போய் சேருமா? என பலரும் கேள்வி

Updated On : 15 மே, 2018 at 1:02 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 6:33 PM

குடிமைப் பொருள் வழங்கல் துறை மக்கள் கவனத்துக்கு தெரிவிக்கும் தகவல் தாளை, பூட்டிய கடை வாயிலில் ஒட்டியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தகவல் மக்களுக்கு போய் சேருமா? என பலரும் கேள்வி எழுப்புகின்றனர்.
ரேஷன் பொருள்கள் விநியோகம் இல்லாததால், காரைக்காலில் ரேஷன் கடைகள் மூடப்பட்டுள்ளன. ஆனால், மக்களின் கவனத்துக்குச் செல்ல வேண்டிய குடிமைப் பொருள் வழங்கல் துறை தகவல் தாள், கடையின் வாயிலில் ஒட்டப்பட்டுள்ளது. குடும்ப அட்டையில் ஆதார் எண் பதிவு பெறாதவர்கள், ஆதார் விவரங்களுடன் குடிமைப் பொருள் வழங்கல் அலுவலகத்தை உடன் அணுகவும் என்று ஒரு தகவலும், இறப்பு, இடமாற்றம், வசிக்கவில்லை போன்றோர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் ஆட்சேபணை இருப்போர் தகுந்த ஆதாரங்களுடன் அலுவலகத்தை நேரில் அணுக வேண்டும். இல்லையெனில், அட்டை ரத்து செய்யப்படும் என மற்றொரு தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மக்கள் வரத்தே இல்லாத கடை வாயிலில் இதுபோன்ற முக்கியத் தகவல் கண்துடைப்பாக ஒட்டப்படுகிறது. இதனால் மக்களுக்கு எந்த பயனும் இல்லை. ஆக்கப்பூர்வமான நடவடிக்கையை குடிமைப் பொருள் வழங்கல் துறை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.