முகப்பு
காரைக்கால்

பெண் பாலியல் துன்புறுத்தல்: இளைஞர் கைது

திருமணம் செய்துகொள்வதாக கூறி பாலியல் துன்புறுத்தல் செய்த இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.

Updated On : 22 மே, 2018 at 12:35 AM
பகிர்:

திருமணம் செய்துகொள்வதாக கூறி பாலியல் துன்புறுத்தல் செய்த இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.
காரைக்கால் பிள்ளைத்தெரு வாசல் பகுதியை சேர்ந்த 21 வயது இளம் பெண் ஒருவர் காரைக்கால் நித்தீஸ்வரம் அருகே ஒரு ஐஸ் கிரீம் கடையில் பணியாற்றி வருகிறார். இவருடன், நல்லாடை கிராமத்தை சேர்ந்த ராஜ்குமரன் (23) என்பவரும் வேலை செய்துவந்தார். இருவருக்கும் நெருங்கிய பழக்கம் ஏற்பட்ட நிலையில், திருமணம் செய்துகொள்வதாக அப்பெண்ணிடம் ராஜ்குமரன் கூறி பாலியல் ரீதியில் துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து, பெண் வீட்டார் காரைக்கால் நகரக் காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை அளித்த புகாரின்பேரில், போலீஸார் வழக்குப் பதிந்து ராஜ்குமரனை திங்கள்கிழமை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.