காரைக்கால் பெருமாள் கோயிலில் கிருஷ்ண ஜயந்தி விழா
காரைக்கால் நித்யகல்யாணப் பெருமாள் கோயிலில் கிருஷ்ண ஜயந்தி விழா ஞாயிற்றுக்கிழமை இரவு கொண்டாடப்பட்டது.
காரைக்கால் நித்யகல்யாணப் பெருமாள் கோயிலில் கிருஷ்ண ஜயந்தி விழா ஞாயிற்றுக்கிழமை இரவு கொண்டாடப்பட்டது.
இதையொட்டி, உத்ஸவர் நித்யகல்யாணப் பெருமாள், நர்த்தன கண்ணன், குழந்தை வடிவிலான கண்ணனுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. ஒரு மணி நேரத்துக்கு மேலாக நடைபெற்ற சிறப்பு திருமஞ்சனத்தையொட்டி, பெருமாள் மற்றும் கண்ணனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. குழந்தை வடிவிலான கண்ணனை, பக்தர்கள் அருகில் சென்று தொட்டு வழிபட்டனர்.
விழாவுக்கான ஏற்பாடுகளை கைலாசநாதர் கோயில், நித்யகல்யாணப் பெருமாள் அறங்காவல் குழுவினர், நித்யகல்யாண பெருமாள் பக்த ஜன சபாவினர் ஆகியோர் செய்திருந்தனர். இதுபோன்று நிரவி கரியமாணிக்கப் பெருமாள் கோயில், திருமலைராயன்பட்டினம் பிரசன்ன வெங்கடேசப் பெருமாள், வீழிவரதராஜப் பெருமாள் கோயிலிலும் கிருஷ்ண ஜயந்தி விழாவையொட்டி, சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம், குழந்தை வடிவிலான கண்ணன் வழிபாடு நடைபெற்றது.