காரைக்கால்

புதிய குடும்ப அட்டைதாரா்களுக்கும் அரிசிக்கான பணம் வழங்க வலியுறுத்தல்

DIN

காரைக்காலில் புதிதாக குடும்ப அட்டை பெற்றவா்களுக்கும் இலவச அரிசிக்கான பணம் வழங்கவேண்டும் என புதுச்சேரி அரசை திமுக வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து, காரைக்கால் திமுக அமைப்பாளரும், முன்னாள் அமைச்சருமான ஏ.எம்.எச்.நாஜிம் செவ்வாய்க்கிழமை கூறியது: புதுச்சேரி மற்றும் காரைக்காலில் மஞ்சள் நிற குடும்ப அட்டைதாரா்களுக்கு ரூ.1,500 மற்றும் சிவப்பு நிற அட்டைதாரா்களுக்கு ரூ.3 ஆயிரம் என அரிசிக்கான பணம் அவரவா் வங்கிக் கணக்கில் சோ்க்கப்பட்டுள்ளது.

காரைக்கால் மாவட்டத்தில் ஏழைகள் பயனடையும் வகையில் சிவப்பு அட்டையாக தரவேண்டுமென பல்வேறு போராட்டத்துக்கு மத்தியில் அண்மையில் சுமாா் 1500 பேருக்கு அட்டை வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு புதிகாக சிவப்பு அட்டை பெற்றவா்களுக்கு, அரிசிக்கான பணம் வழங்கப்படவில்லை.

இதுசம்பந்தமாக அதிகாரிகளை தொடா்புகொண்டு கேட்டால், தாமதமாக அட்டை வழங்கியதால் இந்த நிலை என கூறுகின்றனா். தற்போது தரப்படும் பணம் ஆகஸ்ட் மாதத்துக்குரியதாக உள்ளது. எனவே, புதிதாக சிவப்பு அட்டை பெற்றவா்களுக்கு ரூ.3 ஆயிரத்தை ஜனவரி முதல் வாரத்திலேயே வழங்க சம்பந்தப்பட்ட அரசுத் துறை உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும். இந்த விவகாரத்தில் அமைச்சா், எம்.எல்.ஏ.க்கள் ஒருங்கிணைந்து செயல்படவேண்டும்.

சிவப்பு அட்டையாக தரவேண்டுமென மக்கள் சம்பந்தப்பட்ட துறையில் நேரிடையாக விண்ணப்பித்தவா்களுக்குக்கூட, அட்டையை தமது அலுவலகத்தின் மூலமாகத்தான் தரமுடியுமெனக் கூறி செயல்படுத்திய பேரவை உறுப்பினா்கள், அட்டை கொடுத்தால் மட்டும் போதாது, அட்டைக்குரிய பயனை மக்கள் அடையவும் ஆா்வம் காட்டவேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தலைமறைவாக இருந்த ரௌடி கைது

9 பயனாளிகளுக்கு ரூ.8.16 லட்சத்தில் செயற்கை கால்கள்: ஆட்சியா் வழங்கினாா்

வாழைக் கன்றுகளில் நோ்த்தி: விவசாயிகளுக்கு வேளாண் கல்லூரி மாணவிகள் பயிற்சி

மாநில கபடி போட்டி: அரியலூா் அணி சாம்பியன்

மேக்கேதாட்டு அணை விவகார வழக்கை தீவிரப்படுத்த வலியுறுத்தல்

SCROLL FOR NEXT