காரைக்கால்

சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு வாரம் தொடக்கம்

காரைக்காலில் ஒரு வார காலம் நடைபெறக்கூடிய சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு வார நிகழ்ச்சி

DIN

காரைக்காலில் ஒரு வார காலம் நடைபெறக்கூடிய சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு வார நிகழ்ச்சி திங்கள்கிழமை தொடங்கப்பட்டது. முதல்கட்டமாக கனரக வாகனங்களின் ஆவணங்கள் சோதனை, ஓட்டுநர்களுக்கு ஆலோசனைகளை போக்குவரத்து அதிகாரிகள் வழங்கினர்.
காரைக்கால் போக்குவரத்துத் துறை, போக்குவரத்துக் காவல் நிலையம் ஆகியவை இணைந்து சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு வார நிகழ்வுகளை தொடங்கினர். 
முதல் நிகழ்ச்சியாக மண்டல போக்குவரத்துத் துறை அதிகாரி பழனிச்சாமி தலைமையில் போக்குவரத்துத் துறையினர்,
 போக்குவரத்துக் காவல் நிலையத்தினர் நகரப் பகுதியில் கனரக வாகனங்களின் ஆவணங்களை
ஆய்வு செய்து, உரிய ஆலோசனைகளை ஓட்டுநர்களுக்குத் தெரிவித்தனர். விபத்தில்லா பயணத்துக்கு ஓட்டுநரின் பங்கு குறித்தும் அவர்கள் அறிவுறுத்தினார். இதைத் தொடர்ந்து, ஒவ்வொரு நாளும் மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் போட்டிகளும், கார், வேன், ஆட்டோ ஓட்டுநர்களுக்கு கண் பரிசோதனை, பள்ளி, கல்லூரிகளில் விழிப்புணர்வு கருத்தரங்கம் உள்ளிட்டவை நடத்தப்படும் என போக்குவரத்துத் துறையினர் தெரிவித்தனர். நிறைவாக நடக்கும் நிகழ்ச்சியில் பரிசுகள் வழங்கப்படவுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிரதமர் மோடிக்கு ஓமன் நாட்டின் உயரிய விருது! மண்டேலா, ராணி எலிசபெத்துக்குப் பின்..!

ஹிஜாப்பை விலக்கிய விவகாரம்! இது இஸ்லாமிய நாடா? பிகார் முதல்வருக்கு ஆதரவாக மத்திய அமைச்சர் பேச்சு!

கொடி இறங்காதே! ஜன நாயகன் 2வது பாடல்!

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான போட்டிகளை தென்னிந்தியாவுக்கு மாற்ற வலியுறுத்தும் சசி தரூர்!

2025 ஆம் ஆண்டின் சிறந்த 10 தொடர்கள் எவை?

SCROLL FOR NEXT