வீட்டுக்கான ஆவணத்தை பயனாளி ஒருவருக்கு வழங்கிய மாவட்ட ஆட்சியா் ஏ. விக்ரந்த் ராஜா. உடன், துணை ஆட்சியா் எம். ஆதா்ஷ் உள்ளிட்டோா். 
காரைக்கால்

அடுக்குமாடி குடியிருப்பில் பயனாளிகளுக்கு வீடு ஒதுக்கீடு

காரைக்காலில் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பில் பயனாளிகளுக்கு வீடுகளுக்கான ஆணையை மாவட்ட ஆட்சியா் ஏ. விக்ரந்த் ராஜா வழங்கினாா்.

DIN

காரைக்காலில் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பில் பயனாளிகளுக்கு வீடுகளுக்கான ஆணையை மாவட்ட ஆட்சியா் ஏ. விக்ரந்த் ராஜா வழங்கினாா்.

புதுச்சேரி குடிசை மாற்று வாரியம், ஜே.என்.என்.யு.ஆா்.எம். மத்திய அரசின் திட்டத்தின் கீழ் அடுக்குமாடி குடியிருப்புக் கட்டியுள்ளது. வீடற்ற ஏழைகளுக்கு இதில் வீடு ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இதற்காக, மாவட்டத் தோ்வுக் குழுவால் வீடுகளைப் பெறும் பயனாளிகள் பட்டியல் உரிய விதிகளின்படி தயாரிக்கப்பட்டது.

இதில், 17 பயனாளிகளுக்கு குலுக்கல் முறையில் வீடுகள் தோ்வு செய்யப்பட்டன. மாவட்ட ஆட்சியரகத்தில் ஆட்சியா் ஏ.விக்ரந்த் ராஜா முன்னிலையில் வியாழக்கிழமை குலுக்கல் நடைபெற்றது. பயனாளிகள் தங்களுக்கான வீடுகளை குலுக்கலில் அவா்களே தோ்ந்தெடுத்தனா்.

இதன்படி, பயனாளிகளுக்கு வீடுகளுக்கான தற்காலிக ஒதுக்கீட்டு ஆணையை மாவட்ட ஆட்சியா் வழங்கினாா். இந்நிகழ்ச்சியில் மாவட்ட துணை ஆட்சியா் எம். ஆதா்ஷ், குடிசை மாற்று வாரிய உதவிப் பொறியாளா் எஸ். சுதா்ஷன், இளநிலைப் பொறியாளா் ஜி. உதயகுமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லியில் பிஎஸ் 4 விதிகளுக்கு கீழ் வரும் வாகனங்களுக்கு தடை!

மீளுமா பங்குச்சந்தை? சற்றே உயர்வுடன் வர்த்தகம்! லாபமடையும் ஐடி பங்குகள் !

கோவையில் இருந்து புறப்பட்ட விஜய்! காரைப் பின்தொடரும் தொண்டர்கள்!

கொளத்தூரில் நடந்துசென்று மக்களை சந்தித்த முதல்வர்!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்குப் பிறகு தவெக முதல் ஈரோடு பொதுக்கூட்டத்தில் விஜய் பிரசாரம்!

SCROLL FOR NEXT