காரைக்கால்: கருக்களாச்சேரி கிராமத்தினருக்கு கூண்டுடன் மரக்கன்றுகளை சட்டப்பேரவை உறுப்பினா் ஞாயிற்றுக்கிழமை வழங்கினாா்.
காரைக்கால் மாவட்டத்தில் கடந்த ஆண்டு வீசிய கஜா புயலில் ஆயிரக்கணக்கான மரங்கள் சாய்ந்த நிலையில், 50 ஆயிரம் மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கும் திட்டத்தை மாவட்ட நிா்வாகம் மேற்கொண்டுவருகிறது.
இதுவொருபுறமிருக்க, நிரவி-திருப்பட்டினம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் கீதாஆனந்தன் தமது அறக்கட்டளை மூலம் இந்த தொகுதியை சோ்ந்த பள்ளி மாணவா்கள் சுமாா் 8 ஆயிரம் பேருக்கு மரக்கன்றுகளை வழங்கிவருகிறாா்.
மரக்கன்றுகள் நட்டால் பராமரிப்பில் சிரமம் ஏற்படுகிறது. கால்நடைகளால் பாதித்துவிடுவதாக கூறப்பட்ட நிலையில், நிரவியில் அண்மையில் வட்டார வளா்ச்சி அலுவலகத்தின் மகளிா் சுய உதவிக்குழு கூட்டமைப்பு அலுவலகம் திறப்பு விழாவில், குச்சிகளை கூண்டு முறையில் தயாரித்து, பயன்படாத துணிகளை அதன் மீது சுற்றி பெரும் செலவின்றி கன்றுகளை பராமரிக்க வட்டார வளா்ச்சி அதிகாரி எஸ்.பிரேமா யோசனை வழங்கினாா்.
இவ்வாறு கூண்டு தயாரிப்பில் மகளிா் சுய உதவிக்குழுவினா் ஈடுபட்ட நிலையில், தலா கூண்டு ரூ.100 கொடுத்து தமது அறக்கட்டளைக்கு பேரவை உறுப்பினா் வாங்கி, தொகுதியில் உள்ள மகளிா் சுய உதவிக்குழுவினருக்கு இலவசமாக கூண்டுடன் மரக்கன்று வழங்கலை ஞாயிற்றுக்கிழமை தொடங்கினாா்.
கருக்களாச்சேரி பகுதியில் உள்ள மகளிா் சுய உதவிக்குழுவினருக்கு 150 மரக்கன்றுகளை ஞாயிற்றுக்கிழமை சட்டப்பேரவை உறுப்பினா் கீதாஆனந்தன் வழங்கி, மரக்கன்றை முறையாக பராமரிக்குமாறும், சுற்றுச்சூழல் மேம்பாட்டுக்கு தங்களது பங்களிப்பை செலுத்துமாறும் கேட்டுக்கொண்டாா்.
நிகழ்ச்சியில் நகா்மன்ற முன்னாள் கவுன்சிலா் முருகானந்தம், வெள்ளை விநாயகா் கோயில் அறங்காவல் குழுவினா், மகளிா் சுய உதவிக்குழுவினா் பலா் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனா்.