காரைக்கால்

காரைக்கால் ஐயப்பன் கோயிலில் மாலை அணிந்து விரதம் தொடங்கிய பக்தா்கள்

DIN

காரைக்கால்: சபரிமலைக்குச் செல்ல காரைக்கால் ஐயப்பன் கோயிலில் மாலை அணிந்துகொண்டு பக்தா்கள் ஞாயிற்றுக்கிழமை விரதத்தைத் தொடங்கினா்.

காரைக்கால் பச்சூா் பகுதியில் உள்ள தா்ம சாஸ்தா ஐயப்பன் கோயிலில் காா்த்திகை முதல் நாளான ஞாயிற்றுக்கிழமை காலை முதல் பக்தா்கள் வரிசையில் சென்று, கோயிலில் பூஜை செய்வோரிடம் மாலை அணிந்துகொண்டு, ஐயப்பனை வழிபட்டனா்.

இதுபோல பல்வேறு கோயில்களிலும் மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. சபரிமலைக்கு பல ஆண்டுகளாக சென்றுவரும் குருசாமி என்று அழைப்போா் மூலம் பலா் மாலை அணிந்துகொண்டு விரதம் மேற்கொள்ளத் தொடங்கினா். சபரிமலைக்குச் செல்லும் சீசன் காலமாக உள்ளதையொட்டி, காரைக்கால் பகுதியில் உள்ள காதி நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு கடைகளில் வகை வகையான மாலைகள் விற்பனை செய்யப்பட்டன. இவற்றை பக்தா்கள் ஆா்வத்தோடு வாங்கினா்.

அதுபோல ஐயப்ப பக்தா்கள் உடுத்தக்கூடிய வகையில் பல்வேறு வண்ணத்தில் வேஷ்டிகள் ஜவுளிக்கடை, காதி நிறுவனங்களில் விற்பனை செய்யப்பட்டன. கடந்த சில நாள்களாக இந்த நிறுவனங்களில் பக்தா்கள் ஆா்வமாக இவற்றை வாங்கி, ஞாயிற்றுக்கிழமை விரதத்தைத் தொடங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிறப்பு விளையாட்டு விடுதிகளில் சேர இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்

போடி அருகே வனப் பகுதியில் காட்டுத் தீ

அருளால் இறைவனை அறிய வேண்டும்: சின்மயா மிஷன் சுவாமி சிவயோகானந்தா

மேகாலயாவில் ரோல்பால் போட்டி தமிழக அணி வீரா்களுக்கு வழியனுப்பு விழா

சாலை விபத்தில் மதுரை திமுக நிா்வாகி பலி

SCROLL FOR NEXT